இலங்கை

யாழில் மூன்று நாட்களால் காணமல் போன குடும்ப பெண்!

Published

on

யாழில் மூன்று நாட்களால் காணமல் போன குடும்ப பெண்!

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றுமுன்தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளாதாகவும் இந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவும்மாறும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:- கடந்த 29ஆம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண், இரவு 11மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தவுடன் காணாமல் போயுள்ளார். அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை இதன் பின் பதற்றம் அடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.

Advertisement

இதனை தொடர்ந்து காணமல்போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் குறித்த பெண் காணமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பம் கேட்டுநிற்கின்றனர் .

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version