இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அமுலாகும்புதிய நடைமுறை!

Published

on

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அமுலாகும்புதிய நடைமுறை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்றைய தினம் முதல் பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் பயணிகள் இருக்கை பட்டிகள் அணிந்து செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு இது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கை பயயணிகளும் இருக்கை பட்டிகளை அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Advertisement

இந்த நடைமுறையை மீறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version