இலங்கை

இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Published

on

இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது சமீபத்திய முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும் எனவும் 
 
மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் 
 
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version