இலங்கை

தொலைத்தொடர்பு கோபுரங்களில் கைவரிசை ; தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

தொலைத்தொடர்பு கோபுரங்களில் கைவரிசை ; தமிழர் பகுதியில் சம்பவம்

14 இலட்சம் பெறுமதியான 44 தொலைத்தொடர்பு கோபுர பற்றரிகளுடன் இருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டுள்ள பற்றரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பற்றரிகளும் சம்மமாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பற்றரிகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version