இலங்கை

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

Published

on

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம், நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

உயிரிழந்தவர் நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 40 வயதுடையவர் ஆவார். 

உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version