இலங்கை
இலங்கையர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயனின் படக்குழு ; தூதரகத்தில் முறைப்பாடு
இலங்கையர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயனின் படக்குழு ; தூதரகத்தில் முறைப்பாடு
சிவகார்த்திகேயன் நடித்துவரும் மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இலங்கைக்கான தென்னிந்தியத் துணைத் தூதரகத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“மதராஸி” திரைப்படத்தின் படப்பிடிப்புக்களை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான செலவுத்தொகை இலங்கை ரூபாவில் 5.37 கோடியை செலுத்த தவறியமைக் காரணமாக இந்த முறைப்பாடாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.