இலங்கை

ஒரே வீட்டிற்குள் தங்கியிருந்த 19 பேர் ; சோதனையில் மீட்கப்பட்ட அதிர்ச்சி தரும் பொருட்கள்

Published

on

ஒரே வீட்டிற்குள் தங்கியிருந்த 19 பேர் ; சோதனையில் மீட்கப்பட்ட அதிர்ச்சி தரும் பொருட்கள்

சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 சந்தேநபர்கள் சனிக்கிழமை (02) மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடுவதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

Advertisement

இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள், 2520 மில்லிகிராம், 2300 மில்லிகிராம் நிறையுடைய இரண்டு ஐஸ் போதைப் பொருள்ம் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவரகள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட் வருவதுடன் இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version