இலங்கை

சுற்றுலா பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; இன்று முதல் புதிய நடைமுறை

Published

on

சுற்றுலா பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; இன்று முதல் புதிய நடைமுறை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு சிறப்பு கருமபீடம் நிறுவப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

சுற்றுலா பயணிகள் அதன் மூலம் தற்காலிக சாரதி அனுமதிபத்திரத்தினை எளிதாகப் பெறலாம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை, நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வெரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மட்டுமே தற்காலிக சாரதி அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட்டன.

அவ்வாறு செய்வதில் உள்ள நேரம் மற்றும் செலவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version