இலங்கை
இளம் தாய்க்கு மகள் கண் முன்னே நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்
இளம் தாய்க்கு மகள் கண் முன்னே நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் சம்பவதினத்தன்று இரவு தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ள நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.