உலகம்
ஏமன் கடற்கரையில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 73 பேர் மாயம்!
ஏமன் கடற்கரையில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 73 பேர் மாயம்!
ஏமன் கடற்கரையில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 74 பேர் இன்னும் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு அப்யான் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் மீட்புக் குழுக்கள் நாள் முழுவதும் 68 உடல்களை மீட்டுள்ளன.
அதே நேரத்தில் அதிகாலையில் 12 உயிர் பிழைத்தவர்கள் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டதாக அப்யான் மாகாண சுகாதார அலுவலக இயக்குநர் அப்துல் காதர் பஜாமில் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை