இலங்கை

இலங்கை- இந்தியா ஒப்பந்தங்கள் ; மனுக்கள் தள்ளுபடி

Published

on

இலங்கை- இந்தியா ஒப்பந்தங்கள் ; மனுக்கள் தள்ளுபடி

  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் இன்று (04) தள்ளுபடி செய்யப்பட்டன.

உயர்நீதிமன்ற நீதியரசர் அச்சலா வெங்கப்புலி மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு, விண்ணப்பங்களை தொடர எந்த முதன்மையான காரணங்களும் இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

Advertisement

பாதுகாப்பு ஒத்துழைப்பு, வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை மானிய உதவி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏப்ரல் 5 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பரிமாறப்பட்டன.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் மனோகர டி சில்வா மற்றும் மூத்த வழக்கறிஞர் கனிஷ்கா விதாரண ஆகியோர் ஆஜரானதுடன், சட்டமா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஷ்வரன் ஆஜரானார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version