இலங்கை

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது!

Published

on

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது!

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேகநபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில்  கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ் நந்தன தெரிவித்தார்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை,பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

Advertisement

பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Advertisement

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version