இலங்கை
கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி
கொழும்பின் புறநகர் பகுதியான மாதிவெல பகுதியில் தகாத செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மிரிஹான பொலிஸார் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையில், விடுதியின் மேலாளர், 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 22 மற்றும் 24 வயதுடையவர்கள், அவர்கள் பதுளை மற்றும் புடலுஓயா பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.
சந்தேக நபர்களான ஆண்கள் 22, 25 மற்றும் 33 வயதுடைய திக்வெல்ல மற்றும் பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.