இலங்கை
துப்பாக்கியுடன் வயோதிபர் கைது
துப்பாக்கியுடன் வயோதிபர் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் நேற்று (03) அக்போபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் அக்போபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீனிபுரம் பகுதியில் துப்பாக்கியுடன் வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்போபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் அக்போபுரம் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.