இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை