இலங்கை
நாளை 12 மணிநேர நீர் வெட்டு!
நாளை 12 மணிநேர நீர் வெட்டு!
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய மற்றும் வாத்துவ பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.
இந்த நீர் வெட்டு காரணமாக நுகர்வோர் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.