இலங்கை

மற்றுமொரு பாரிய விமான விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்

Published

on

மற்றுமொரு பாரிய விமான விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கொல்கத்தா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட தனால், மற்றுமோர் பாரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று (03) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 2718 விமானம், பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KIA) நேற்று இரவு 7.16 மணிக்கு புறப்பட்டது.

Advertisement

எனினும், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

விமானத்தின் நடுவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்த தகவலுக்குப் பிறகு, தரையிறங்கும்போது ஏற்படும் எந்தவொரு பாதிப்பிற்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 8.21 மணிக்கு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் இரவு 9.19 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர்.

Advertisement

விமானம் அவசரமாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் விமானத்துறையில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version