இலங்கை
மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு!
மாரவில கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே தகராறு!
மாரவில, முதுகடுவ கடற்கரை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்த நபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மூவர் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்ய மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ஒ]