இலங்கை
முன்பள்ளியின் மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம்!
முன்பள்ளியின் மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம்!
முன்பள்ளி சிறார்களிற்கு 65 இலட்ச நிதி ஒதுக்கீடு மூலம் சத்துணவு வழங்கும் திட்டம் மானிப்பாய் பிரதேச சபையால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஓர் அங்கமாக மானிப்பாய் கோவில்பற்று முன்பள்ளியின் 43 மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (04) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
நிகழ்வில் சபையின் தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களான கலொக் கணநாதன் உஷாந்தன், ஞானரூபன், வீரசிங்கம், தயாபரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு முன்பள்ளி சிறார்களிற்கு சத்துணவை வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.