இலங்கை

முல்லைத்தீவில் துயரத்தை ஏற்படுத்திய மரணம்; நடந்தது என்ன?

Published

on

முல்லைத்தீவில் துயரத்தை ஏற்படுத்திய மரணம்; நடந்தது என்ன?

 முல்லைத்தீவு – புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம் பகுதியில் நேற்று சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43 வயதான குடும்பஸ்தர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

காணாமல்போன குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக் கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன்,  காணாமல்போன  குடும்பஸ்தர் தொடர்பில் பல சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் குடும்பத்திஅனரிடம் நேரடியாக சென்று கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தார்.

Advertisement

காணாமல்போனவரை பொலிசார் தேட தயாரான நிலையில் , குறித்த நபர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில் இனங்காணப்பட்டதாக ஊர்மக்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான  காரணம் வெளியாகாத  நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version