வணிகம்

Gold Rate Today, 4 August: மீண்டும் அதிகரித்த தங்கம் விலை… சோகத்தில் இல்லத்தரசிகள்!

Published

on

Gold Rate Today, 4 August: மீண்டும் அதிகரித்த தங்கம் விலை… சோகத்தில் இல்லத்தரசிகள்!

இந்தியாவில், தங்கம் என்பது ஒரு முதலீடாக மட்டுமின்றி, கலாச்சார மற்றும் உணர்வுபூர்வமான மதிப்பையும் கொண்டுள்ளது. திருமணங்கள், பண்டிகைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் தங்கம் வாங்குவது மரபாக உள்ளது. தங்கத்தின் விலை ஸ்திரமாக இருக்கும்போது, நுகர்வோர் மத்தியில் வாங்கும் ஆர்வம் பொதுவாக அதிகரிக்கும்.சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, பங்குச் சந்தை நிலவரம், மற்றும் உலகப் பொருளாதாரச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இந்த காரணிகளில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், தங்க விலையில் ஸ்திரத்தன்மை நீடிக்கிறது. பொதுவாக, தங்கத்தின் விலை அதிகரிப்பது அல்லது குறைவது என்பது பொருளாதார நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருந்து. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்து தங்கம் ரூ.73,280 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,160 ஆகவும் விற்பனையானது. போன வார திங்கள்கிழமை மாற்றமின்றி அதே விலை தொடர்ந்த நிலையில், தங்கத்தின் விலை சவரனுக்கு வியாழக்கிழமை ரூ. 320 குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் ரூ. 160 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை ஆக் 2 ஆம் தேதி, மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ74,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,290-க்கு விற்பனையாகிறது.இந்நிலையில் இன்றும் சற்று அதிகரித்துள்ளது தங்கம் விலை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ 74,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,295-க்கு விற்பனையாகிறது.அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று சற்று குறைந்து ஒரு கிராம் ரூ. 122.90 க்கும் ஒரு கிலோ ரூ.1,22,900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version