இலங்கை

கலாச்சார நிதியத்திற்கு சொந்தமான இடங்களுக்கு செல்ல 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி!

Published

on

கலாச்சார நிதியத்திற்கு சொந்தமான இடங்களுக்கு செல்ல 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி!

கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களுக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

 மத்திய கலாச்சார நிதிய ஆளுநர் சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

 உள்ளூர் குழந்தைகளிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும். 

 அதன்படி, சிகிரியா, யாபஹுவ மற்றும் தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை நுழைவுச் சீட்டுகள் இல்லாமல் பார்வையிட குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

 இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு குழந்தைகளுக்கு நுழைவு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version