இலங்கை

கொலை குற்றவாளி சோமரத்னாவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு- கஜேந்திரகுமார் எம்.பி!

Published

on

கொலை குற்றவாளி சோமரத்னாவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு- கஜேந்திரகுமார் எம்.பி!

செம்மணி மனிதப்புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி  வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ச சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். 

Advertisement

ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார்  அறுநூறு உடல்கள் வரை  புதைக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.

அவரின்  மனைவி, செம்ணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம் கொண்டு வரப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது கணவர்  கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன். எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார். 

ஆகவே, அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version