இலங்கை
யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த கார் கடலுக்குள் பாய்ந்தது
யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த கார் கடலுக்குள் பாய்ந்தது
யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.
இன்றையதினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை.
அதன்பின்னர் நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டது.