இலங்கை

இணுவில் தியேட்டர் அருகில் இருவர் கஞ்சாவுடன் கைது

Published

on

இணுவில் தியேட்டர் அருகில் இருவர் கஞ்சாவுடன் கைது

  யாழ்ப்பாணம் –இணுவில் தியேட்டர் அருகில்  நேற்றிரவு, கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவரே கைதாகியுள்ளனர்.

Advertisement

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.

கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.

Advertisement

விசாரணைகளின் பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version