இந்தியா

இளைஞர்களுக்கான மாடல் அரசு – மு.க.ஸ்டாலின்

Published

on

இளைஞர்களுக்கான மாடல் அரசு – மு.க.ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கியுள்ளார் .

உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் கூறியதாவது: இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர். திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு.தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைத்து துறை கூட்டு முயற்சியால் கிடைத்துள்ளது. 

அனைவருக்கும் நன்றி.
என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன்.

விருத்தாசலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து- சிறுவன் உயிரிழப்பு இது சாதாரண வெற்றியல்ல, நெருக்கடி, அவதூறுகளுக்கு இடையே நாம் அடைந்த சாதனை.

Advertisement

தேர்வாணையம், பொதுத்துறைகள் மூலமாக 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசில் முக்கிய பணியில் உள்ளனர். கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் திட்டமிட்டு செயலாற்றுகிறோம். 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

நகராட்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version