இலங்கை

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி

Published

on

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி

  கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதியதில் திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றைய தினம் இரவு வீதியை கடக்க முற்பட்டவர் மீது , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மோதியுள்ளது.

Advertisement

விபத்தில் 55 வயதான திருகோணமலையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version