இலங்கை

கொடுத்த கடனை வாங்க சென்ற இளைஞன் கொலை

Published

on

கொடுத்த கடனை வாங்க சென்ற இளைஞன் கொலை

    கொடுத்த கடன் தொகையை வாங்க சென்ற இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று (05) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version