இலங்கை

கோட்டா கோ கம போன்று அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது!

Published

on

கோட்டா கோ கம போன்று அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது!

  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மக்கள விரப்பட்டதை போன்ற ஓர் நிலமை ஜனாதிபதி அனுரவுக்கு வராது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

Advertisement

கோட்டா கோ கம போன்று, அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது எனவும் அது உருவாக்கப்பட்டால், அதை அரசியல்வாதிகள் அல்லாது, மக்களே உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மக்கள் போய்விடுங்கள் என்று சொன்னால், தோழர் அனுர ஒரு கணம் கூட தங்கமாட்டார் எனவும், நம்மில் யாரும் ஒரு கணம் கூட தங்க மாட்டோம் எனவும்  அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

பெல்வத்தையில் உள்ள செவனகல கரும்பு விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி, அங்கும் ஒரு கிராமத்தை உருவாக்க முயன்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version