இலங்கை
பெரஹரா வளாகத்திற்குள் தந்தையும் , மகளும் கைது
பெரஹரா வளாகத்திற்குள் தந்தையும் , மகளும் கைது
கண்டியில் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரா வளாகத்திற்குள் ஆசிட் போத்தல், கத்தி மற்றும் கராத்தே சங்கிலியுடன் நுழைய முயன்ற தந்தையும் , மகளும் புதன்கிழமை (06) கைது செய்யப்பட்டனர்.
கண்டி யட்டிநுவர சந்திப்பில் பெரஹரா பாதையில் நுழைந்தவர்களை உடல் சோதனை செய்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, அவருடன் வந்த தனது மகள் அச்சுறுத்தப்பட்டதால் அவர் பொருட்களை கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபரும் அவரது மகளும்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.