இலங்கை
பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!
பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பொதுப்போக்குவரத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த 0719090900 இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS – மற்றும் Whatsapp) மற்றும் 021 228 5120 நிலையான தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கரினை பேருந்துக்களில் ஒட்டும் நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன் தலைமையில் நேற்றையதினம் (06) நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.