இலங்கை

ஆட்சேர்ப்புச் செய்ய விண்ணப்பம் கோரல்!

Published

on

ஆட்சேர்ப்புச் செய்ய விண்ணப்பம் கோரல்!

வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நான்கு பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி அறிவித்துள்ளார்.

மாகாணத் தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்), மாகாணத் தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்), மாகாணத் தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (படவரைஞர்), வடக்கு மாகாணப் பொதுச் சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆகிய நான்கு பதவியணிகளுக்குமே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Advertisement

முழுமையான அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பவற்றை www.np.gov.lk Exam and Recruitment Advertisement எனும் வடக்கு மாகாண இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version