இந்தியா

எஸ்.எஸ்.சி ஊழல்: இ.டி சோதனை… போனை புதருக்குள் வீசி சுவரேறி குதித்து தப்ப முயன்ற திரிணாமூல் எம்.எல்.ஏ கைது

Published

on

எஸ்.எஸ்.சி ஊழல்: இ.டி சோதனை… போனை புதருக்குள் வீசி சுவரேறி குதித்து தப்ப முயன்ற திரிணாமூல் எம்.எல்.ஏ கைது

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனைகளுக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜீபன் கிருஷ்ணா சஹாவை முர்ஷிதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறை திங்கள்கிழமை கைது செய்தது. இந்த கைது, மேற்கு வங்கம் முழுவதும் அமலாக்கத்துறை ஒருங்கிணைந்த சோதனைகளை நடத்தி வரும் எஸ்.எஸ்.சி (School Service Commission) ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகும்.ஆங்கிலத்தில் படிக்க:விசாரணை அமைப்புடன் ஒத்துழைக்க சஹா மறுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சோதனையின் போது, அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க, அவர் சுவரில் ஏறி குதித்து, தனது செல்போனை வீட்டின் பின்னால் உள்ள புதருக்குள் வீசியுள்ளார். செல்போன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.2023-ம் ஆண்டில், சி.பி.ஐ சஹாவின் வீட்டில் நடத்திய மற்றொரு சோதனையின் போது, பர்வன் எம்.எல்.ஏ தனது இரண்டு செல்போன்களை ஒரு குளத்தில் வீசியதாக கூறப்படுகிறது.சஹாவின் உறவினர்களின் வீடுகளிலும், முர்ஷிதாபாத்தில் உள்ள ரகுநாத்கஞ்சில் உள்ள அவரது மாமனார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சைந்தியா நகராட்சியில் உள்ள 9-வது வார்டு திரிணாமூல் கவுன்சிலர் மாதா சஹாவின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. மாதா, ஜீபன் சஹாவின் தாய்வழி அத்தை என்று கூறப்படுகிறது.“அவர்கள் எனது வீட்டிற்கு வந்து, சோதனை நடத்திவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டனர். நான் அவர்களுடன் முழுமையாக ஒத்துழைத்தேன். ஆகஸ்ட் 28-ம் தேதி அவர்களிடம் ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்” என்று மாதா பின்னர் கூறினார்.மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் புருலியாவில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட பிரசன்னா ராயின் மாமனார் வீட்டிலும் சோதனை நடத்தினர். தற்போது சிறையில் உள்ள ராய், ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் “இடைத்தரகராக” செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இதற்கு முன்பு அவரது பல சொத்துகளைக் கைப்பற்றியுள்ளது.ராயின் மூன்று மைத்துனிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை கிடைத்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போதைய சோதனை இந்த நியமனங்களுடன் நேரடி தொடர்புள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.முர்ஷிதாபாத்தில் உள்ள ஆண்டி மஹிஷ் கிராமத்தில் உள்ள ஒரு வங்கி ஊழியரின் வீட்டிலும் தேடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது விசாரணையின் பரந்த நோக்கத்தைக் குறிக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version