உலகம்

கஞ்சா தொடர்பில் ட்ரம்பின் புதிய அறிவிப்பு!

Published

on

கஞ்சா தொடர்பில் ட்ரம்பின் புதிய அறிவிப்பு!

கஞ்சாவைக் குறைந்த ஆபத்தான மருந்தாக மறு வகைப்படுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். 
 
அத்துடன் இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்நிலையில் ட்ரம்பின் குறித்த அறிவிப்பிற்குப் பின்னர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் கஞ்சா தொடர்பான வணிகங்களின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version