இலங்கை

குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்!

Published

on

குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்!

விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

எனினும் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. 

Advertisement

அதனால், குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version