உலகம்
ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு
ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு
அலாஸ்காவில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் தொடர்பில் போர் நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஷ்யா மிகமோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களுடனான நிகர்நிலை சந்திப்பின்போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளதுடன் ரஷ்யாவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.
புட்டினுடனான சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றால் புட்டின் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தானும் இணையும் சந்திப்பொன்றிற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.