உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அறிவிப்பு!

Published

on

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அறிவிப்பு!

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் அறிவித்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் நடைபெறும் 80 வது கூட்டத்தொடரில் ஐ.நா.பொதுச் சபையில் நடைமுறைகளின்படி அங்கீகரிப்போம் என்றும்

Advertisement

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காசாவில் ஒரு ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) நடக்கிறது.குழந்தைகள் பசியால் இறக்கின்றனர்.

மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து காசா மக்களின் பசி மற்றும் துன்பத்தைப் போக்க இரு நாடுகள் தீர்வுதான் சிறந்த வழி” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

Advertisement

193 ஐ.நா.உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

ஜி 20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில்,பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் செப்ரெம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version