இலங்கை
மனநலம் பாதிக்கப்பட்டவரின் கத்தி வெட்டுக்கு இலக்கான தாயும், சகோதரனும்!
மனநலம் பாதிக்கப்பட்டவரின் கத்தி வெட்டுக்கு இலக்கான தாயும், சகோதரனும்!
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகி தாயும் சகோதரனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
மேலதிக சிகிச்சைக்காக தாயார் யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன். நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.