இலங்கை
கொத்துரொட்டிக்குள் இறந்து கிடந்த புழு – குருநாகலில் சம்பவம்!!
கொத்துரொட்டிக்குள் இறந்து கிடந்த புழு – குருநாகலில் சம்பவம்!!
குருநாகல் நகரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் கொத்துரொட்டிக்குள் இருந்து இறந்து கிடந்த புழுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல் கொழும்பு வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 18ம் திகதி கொத்துரொட்டியொன்றை உட்கொள்ளச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
கொத்துரொட்டியை உட்கொள்ளும் போது அதற்குள் இருந்து இரண்டு அங்குலம் நீளமான புழுவொன்று இறந்த நிலையில் கிடப்பது அவரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வினவியபோது அவர்கள் மௌனம் காத்துள்ளனர்.
இந்நிலையில் குருநாகல் நகரின் உணவகங்கள் தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் உரிய சோதனைகளை மேற்கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் காரணமாகவே இவ்வாறான அசுத்தமான உணவு வகைகள் அங்கு பரிமாறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.