இலங்கை

கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விசேட பாதுகாப்பு!

Published

on

கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விசேட பாதுகாப்பு!

ரணில் விக்கிரமசிங்க சிகிச்சைப் பெற்று வரும் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 22 ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Advertisement

 எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

 அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version