இலங்கை
சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்!!
சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்!!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சஷ நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஓகஸ்ட் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்சஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.