இலங்கை
சுற்றிவளைப்பில் 4,544 பேர் கைது!
சுற்றிவளைப்பில் 4,544 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 4 ஆயிரத்து 544 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 26 பேரும், சந்தேகத்தின் பேரில் 676 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 204 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 138 பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 67 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 11 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 422 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.