இலங்கை
டயானா கமகேவிற்கு பிடியாணை ; நீதிமன்றம் உத்தரவு
டயானா கமகேவிற்கு பிடியாணை ; நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதால், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று(26) கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.