இலங்கை

திருகோணமலையில் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு!

Published

on

திருகோணமலையில் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் துறைசார் உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு, பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (12) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதலில் இடம்பெற்ற விழிப்புணர்வில் வளவாளராக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் கலந்து சிறப்பித்தார்.

Advertisement

அனர்த்த காலங்களின் போது எவ்வகையான சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதனை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பிலும் ஆபத்தை விளைவிக்க கூடிய அனர்த்தங்களின் போது முற்காப்பு நடவடிக்கைகள் அனர்த்தங்களின் போதான மற்றும் அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பிலும் பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டன.

விழிப்புணர்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுதாய மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version