இலங்கை

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்த பேருந்து!

Published

on

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்த பேருந்து!

தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்துள்ளது.  

காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version