இலங்கை

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை – நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

Published

on

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை – நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு அப்பால் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால் நாட்டில் தற்போது சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

அத்துடன் கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டிருந்தால் மருந்துகள் உரிய முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பிராந்திய கொள்முதல்களுக்காக மருத்துவமனைகளுக்கு 3,500 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுவதுடன், சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இணக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version