இலங்கை
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலரின் நிலை கவலைக்கிடம்!
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலரின் நிலை கவலைக்கிடம்!
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கோர விபத்தில் சிக்கி 22 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று மொனராகலை வெலியாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 22 பேர் மொனராகலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து தொடர்பாக மொனராகலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.