இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய சந்தேக நபர்

Published

on

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய சந்தேக நபர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து, பொலிஸ் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகவீனமடைந்து பொலிஸ் பாதுகாப்புடன்  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

Advertisement

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்து, நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் உள்ளக விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில் , அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version