இலங்கை
2025இல் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
2025இல் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீரில் மூழ்கிய விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும்,
33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.