இலங்கை
இந்த அரசால் எம்.பி.பதவிக்கு அகௌரவம்
இந்த அரசால் எம்.பி.பதவிக்கு அகௌரவம்
இந்த அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கு வாகனமில்லை. நாடாளுமன்றுக்குப் பஸ்களில் வருகிறார்கள். இருந்த வாகனங்களை விற்று விட்டு கப்ரக வாகனங்களை இந்த அரசு கொள்வனவு செய்துள்ளது. அதுவும் அரசின் பாவனைக்கு அல்ல அவர்களின் கட்சியின் பாவனைக்கு இந்த ஆட்சியாளர்களுக்கு மூளை சிறிது. வாய் மட்டும் பெரிது. அதை வைத்தே ஆட்சிக்கு வந்து விட்டார்கள். இப்போது ஆட்சி நடத்தத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்- என்றார்.